யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Milton Keynes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதி சபாநாயகம் அவர்கள் 01-05-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், விமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும், யசோதினி, காலஞ்சென்ற நிமலன் ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான சபாநடேசன், சபாநேசன், சபாரட்னம் மற்றும் சபாநாதன், சுசீலவதி, சிவஞானவதி, சபேந்திரன், சங்கரப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, சகுந்தலாதேவி, துரைச்சாமி, சிவமலர் மற்றும் தனலட்சுமி, சரஸ்வதி, மங்கையற்கரசி, யசோதரா, அனுலா, சிவராஜா, சந்திராதேவி, சாரதாதேவி, குகதாசன், சிவநேசன், ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும், அரன், கிரன், ரூபி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தற்போதைய அசாதாரண சூழ்நிலைகாரணமாக உங்கள் வருகையை தவிர்த்துக் கொள்ளும்படியும் உங்கள் இரங்கல் செய்தியினை தொலைபேசி வழியாகவோ அல்லது சமூக வலையத்தளங்களினூடாகவோ பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் வேண்டுகின்றோம்.
திரு சபாபதி சபாநாயகம்

0 Comments - Write a Comment