யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கச்சேரி கிழக்கு வீதியை வசிப்பிடமாகவும், தற்போது கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட அன்னலெட்சுமி துரைராஜா அவர்கள் 12-10-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற துரைராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தம்பித்துரை ஆச்சிக்கண்ணு தம்பதிகளின் மகளும்,
நந்தகுமார், வசந்தகுமாரி, சந்திரகுமார், கமலகுமாரி, இந்திரகுமார், ஆனந்தகுமார், சிறிகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிருஷ்ணரஞ்சினி, பாலச்சந்திரன், சந்திரிகா, அருள்ராஜா, ரஞ்சினிதேவி, சதானந்தி, கிரிஜா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் யாழ் ஓட்டுமடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
0 Comments - Write a Comment