யாழ். புங்குடுதீவு குறிகாட்டுவானைப் பிறப்பிடமாகவும், மண்டைதீவு 6ம் வட்டாரம், திருநெல்வேலி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கனகலிங்கம் அவர்கள் 30-10-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மண்டைதீவு/ புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இரா. நாகலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நீ. மு கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,பாலமுரளி, பார்த்தீபன், காலஞ்சென்ற கபிலன் மற்றும் கார்த்தியாயினி, மயூரதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜெயகலா, சசிகலா, சிவகெளரி, கெளசிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான சங்கீத பூஷணம் சண்முகலிங்கம்(இசை ஆசிரியர்), சதாசிவலிங்கம், நாகலெட்சுமி(ஆசிரியை), இராசலிங்கம்(தபால் அதிபர்), சுந்தரலிங்கம்(பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,இராசலெட்சுமி, காலஞ்சென்ற பூமணி மற்றும் தனபாக்கியம்(ஆசிரியை), சிவயோகாம்மாள்(ஆசிரியை) ஆகியோரின் அருமை மைத்துனரும்,பிரணவி, பிரணவன், சேஷன், பாரதி, ஆரணி, ஆரபி, அஷ்வினி, பூஜா, ஹரீஸ், ஹீநிதி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment