யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசமூர்த்தி நமசிவாயம் அவர்கள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம்(ஆறுமுகம்) நாகம்மா, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற மங்கையற்கரசி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,சிவகுமாரன்(சிவன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,சுதர்ஜினி அவர்களின் அன்பு மாமனாரும்,திவ்யா, ஆர்த்திகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,சோமசுந்தரி, காலஞ்சென்ற நவமணி, கமலாம்பிகை, சண்முகநாதன், சோமசுந்தரம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், கணபதிப்பிள்ளை மற்றும் தர்மபாலன், காலஞ்சென்ற விக்னேஸ்வரி, சந்திராதேவி, காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், மீனாட்சி மற்றும் செல்லம்மா(இராசமணி), காலஞ்சென்ற விவேகானந்தன், புனிதவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,திருமேனி, காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம், பசுபதிப்பிள்ளை மற்றும் கமலரெத்தினம், காலஞ்சென்ற நமசிவாயம் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,முத்துலிங்கம், சிவயோகம் ஆகியோரின் அன்புச் சம்மந்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment