மலேசியா Melaka ஐப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பாலநாயகம் அவர்கள் 16-03-2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் சுகிர்தமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிவயோகம் அவர்களின் பாசமிகு கணவரும்,சுசீலா, சிவபாலன்(ஐக்கிய அமெரிக்கா), சிவரூபன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,இராஜேஸ்வரா, ரேணுகா(ஐக்கிய அமெரிக்கா), தக்சினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான பத்மாதேவி, சுகிர்தநாயகம், புனிததேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், நகுலேஸ்வரி, சண்முகராசா மற்றும் யோகராணி, சச்சிதானந்தன், பிரேமானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சாருகா, ஷவீணா(ஐக்கிய அமெரிக்கா), தனீசா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 20-03-2024 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று, பின்னர் பி.ப 01:00 மணியளவில் கல்கிசை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர் replique montre breitling
0 Comments - Write a Comment