திரு நமசிவாயம் இராதாகிருஷ்ணன்
யாழ். புலோலி வடக்கு பருத்தித்துறை கணையந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் இராதாகிருஷ்ணன் அவர்கள் 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று புலோலியில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம், இராசரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,பாலகெளரி அவர்களின் அன்புக் கணவரும்,கோபிகிருஷ்ணன், விஜய்கிருஷ்ணன், ராகவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,இராமகிருஷ்ணன்(அவுஸ்திரேலியா), கோபாலகிருஷ்ணன்(பிரித்தானியா), இராதாலட்சுமி(பிரித்தானியா), சுந்தரலட்சுமி(இலங்கை), ஜெயலட்சுமி(கனடா), விஜயலட்சுமி(டென்மார்க்), முத்துலட்சுமி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,பாலசுப்ரமணியம்(கனடா), பாக்யலட்சுமி(கனடா), பாலகணேஷன்(கனடா), பாலசுந்தரி(கனடா), பாலமுரளி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 16-05-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 08:00 மணியளவில் ஆனைவிழுந்தான் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர்