யாழ். கரணவாய் தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் கமலாதேவி அவர்கள் 13-05-2020 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற வெள்ளைக்குட்டி, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும், சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், சுகந்தன்(லண்டன்), சுதாகரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுஜித்தா ஆகியோரின் அன்புத் தாயாரும், சர்வமங்களேஸ்வரி, அனித்தா, முருகதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, மகேஸ்வரி, இராசலட்சுமி, தங்கமுத்து, காலஞ்சென்ற இராசரத்தினம், துரைராசா, லீலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும், கவிசா, கட்றீனா, தருன், தர்சனா, அஸ்வின், சிரோகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2020 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரணவாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
திருமதி சிவசுப்பிரமணியம் கமலாதேவி

பிறப்பு : 06/08/1945
இறப்பு : 13/05/2020
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
சுகந்தன் - மகன் | United Kingdom | +447908000052 |
சுதாகரன் - மகன் | France | +33626305138 |
0 Comments - Write a Comment