யாழ். துன்னாலை தெற்கு கொற்றை உடையார் பகுதியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, மட்டக்களப்பு, காலி, மன்னார், கொழும்பு ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட செல்வத்துரை பஞ்சாட்சரம் அவர்கள் 14-09-2020 திங்கட்கிழமை அன்று துன்னாலையில் இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், வல்லிபுரம்(வைத்தியர்) பத்தினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வத்துரை(Customs Officer) அவர்களின் அன்பு மனைவியும், செல்வகுமாரன்(தொழில்நுட்பவியலாளர்– Elector and Mechanical- நோர்வே), காலஞ்சென்றவர்களான கோபாலகுமாரன்(பிரதம சிறாப்பர்), சிவகுமாரன் மற்றும் நந்தகுமாரன்(வங்கி முகாமையாளர்- NSB), பஞ்சகுமாரன்(முன்னாள் பேராதனை வளாக பொறியியல் பீட விரிவுரையாளர்- Consulting Civil and Structural Engineer, அவுஸ்திரேலியா), பவளராணி(ஆசிரியை- திரு இருதய கல்லூரி கரவெட்டி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுலோசனாதேவி, பத்மா, நாமகள் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, துரைச்சாமி(பிரதம தபாலதிபர்), இராசையா(கூட்டுறவு பரிசோதகர், சட்ட விரிவுரையாளர், நீதவான், ACCD) மற்றும் வீரசிங்கம்(பதிவாளர்- நீதிமன்றம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விக்னகுமாரன், இறைகுமாரன், கரப்பிரியா, தேனிக்கா, தர்மிக்கா, இலக்கியா, தமன்யா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும், நாவேந்தன் அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிட்டிது இந்து மயானதில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment