யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பூர்வீகமாகவும், கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Épinay-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் ரவீந்திரன் அவர்கள் 16-06-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், பரமேஸ்வரி(வவுனியா) தம்பதிகளின் அன்பு மகனும், துரைராசா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,ராகினி அவர்களின் அன்புக் கணவரும்,கஜீத்தன், சர்மினி, பிரவீண்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மோகனதாஸ்(சுவிஸ்), வரததாஸ்(சுவிஸ்), சுஜிதா(இலங்கை), சித்திரா(பிரான்ஸ்), சுதாகரன்(இலங்கை), நந்தினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,ராதாரஞ்திதம், பரமேஸ்வரி, காலஞ்சென்ற குலசிங்கம், நகுலேஸ்வரன், சுகந்தி, ஆனந் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment