யாழ். சாவகச்சேரி பெரிய அரசடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணேசன் இராஜபூபதி அவர்கள் 07-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற பசுபதி(இராசமணி), அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த புத்திரியும், காலஞ்சென்ற கனகசபை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கனகசபை கணேசன் அவர்களின் அன்பு மனைவியும்,துரைரத்தினம்(லண்டன்), காலஞ்சென்ற இலட்சுமிப்பிள்ளை, விமலாதேவி, யோகீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,இராஜரஞ்சிதம்(ஆசிரியை- யா/ மட்டுவில் சரஸ்வதி வித்தியாலயம்), இராஜஜீவி(ஆசிரியை- யா/மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சந்திரசேகரம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(சாவகச்சேரி பிரதேச சபை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,சிவகாமிப்பிள்ளை(லண்டன்), காலஞ்சென்ற நடராஜா, கணேசலிங்கம், காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், சண்முகலிங்கம் மற்றும் நவரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,குகரதன்(தொழில்நுட்பவியல் நிறுவகம்- மொரட்டுவைப் பல்கலைக்கழகம், NDT), பிரியந்தி(சித்த மருத்துவமும் அறுவை சிகிச்சையும்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), தனுஷிகா(பிரயோக விஞ்ஞானம்- வவுனியாப் பல்கலைக்கழகம்), பிறின்ஷிகா, குகபரன்(பொறியயல் பீடம்- மொரட்டுவைப் பல்கலைக்கழகம்), குகபவன்(A/L- யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,கெளசல்யா(லண்டன்), கெளந்தரிகா(லண்டன்), கெளதினியா(லண்டன்), நற்குணவதனி, சிவதர்சினி, பூங்கோதை(ஜேர்மனி), தேவிகா(ஆசிரியை- யா/மட்டுவில் சரஸ்வதி வித்தியாலயம்), காண்டீபன், தர்மினி, கபிதீபன், வனஜா, சுகுணன்(கனடா), கெளரி, சசி, கிரித்திகா(ஆசிரியை- யா/சாவகச்சேரி மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 08-03-2023 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment