யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட தவமலர் இராசையா அவர்கள் 12-10-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்- இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களம், Technical Officer) அவர்களின் அன்பு மனைவியும்,
சசிகலா(ஜேர்மனி), மோகனதாஸன்(கனடா), உதயதாசன்(ஜேர்மனி), சதீஸ்வரி(ஜேர்மனி), சாந்தினி(ஜேர்மனி), சந்திரவதனி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேந்திரன், ஜெயரூபி(சாந்தி), தவச்செல்வி(அருந்தி), ஜெயபாலன்(ஜெயா), பன்னீர்ச்செல்வம்(செல்வம்), சந்திரகுமார்(ராஜன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கனகலிங்கம், பரமலிங்கம், குமாரலிங்கம், காலஞ்சென்ற மருதலிங்கம், இரத்தினசிங்கம், சரஸ்வதி(சுவிஸ்), பரமேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, செல்வநாயகம், செல்லத்துரை, நல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரசாத், பிரசன்னா, பிரவீனா, சுபாங்கி, யதீசன், உஷாந், உஷானா, உஷாஜி, சிந்து, சினோயா, ஜெனுசன், சுஜீபன், சஜீபன், சஜானி, சங்கீத், சகானா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இனாயா, சஞ்சனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
0 Comments - Write a Comment