யாழ். கரணவாய் மத்தி, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தனபாக்கியவதி பொன்னம்பலம் அவர்கள் 10-11-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம் மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை இராமலிங்கம்(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பொன்னம்பலம்(RP master) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான இரகுநாதன், புஸ்பநாதன், குணபாக்கியவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,வாசுகி, ரேணுகா(ஆசிரியை யா/மெதடிஸ் பெண் உயர்தர பாடசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,Dr.அஜந்தன், Dr.வசீகரன்(மாகாண பணிப்பாளர் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம்- வடக்கு மாகாணம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,Dr.உமேசன், செளமியா, ஆர்த்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 11-11-2023 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment