யாழ். கரவெட்டி ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kamp-Lintfort ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் குலநாயகம் அவர்கள் 12-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஏரம்பு சுப்பிரமணியம், சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,நகுலேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,விஜிதா(ஜேர்மனி), அனித்தா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சக்திவேல்(ஜேர்மனி), பிரதீபன்(லண்டன்) ஆகியோரின் relojes de imitacion பாசமிகு மாமனாரும்,யஸ்மீரா, மித்ரா தேவி, சஷ்வின் லிங்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற சிவஞானம்(கரவெட்டி), குணரட்ணம்(விஸ்வமடு), விமலாதேவி(கனடா), கணேசராசா(கொழும்பு), திருச்செல்வம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,குணமனி சிவஞானம்(முடக்காடு), மனோன்மணி குணரட்ணம்(விஸ்வமடு), ஞானேஸ்வரி கணேசராசா(கொழும்பு), ஜெகநாதன் விமலாதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நிமலராசா(மோகன்-லண்டன்), சுதர்சன்(லண்டன்), முரளிதரன்(லண்டன்), நிஷாந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,இலக்ஷி, தூபிகா(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment