யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கு பண்டாவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், வல்வெட்டி ஒழுங்கைத்தோட்டம், அல்வாய் உண்டுவத்தை, கொழும்பு தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் பொன்னம்பலம் அவர்கள் 01-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பொன்னம்பலம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தவேள் கெளரி அம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,கமலவதனா அவர்களின் அன்புக் கணவரும்,ஹரிஹரன், தசரதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுதர்சினி, தமயந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான ரத்தினம், சண்முகநாதன் மற்றும் தர்மரத்தினம், மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுப்ரமணியதாஸ், சண்முகதாஸ், யோகேஸ்வரன், பாலேந்திரன், சந்திரவதனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தரண்யா, ஷஜினயா, அபிநயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 02-05-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அல்வாய் உண்டுவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment