யாழ். வட்டுக்கோட்டை மாவடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளை இரட்ணகாரா பிளேஸ், பிரித்தானியா Watford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புனிதவதி விஸ்வேஸ்வரன் அவர்கள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காரைநகர் களபூமியைச் சேர்ந்த காலஞ்சென்ற காசிப்பிள்ளை விஸ்வேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,ஜீவரட்சகி(ஜீவா), புவனரட்சகி(புவனா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,அமிர்தலிங்கம், ரவிச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம், ரட்ணேஸ்வரி, தவனேஸ்வரி, மகாலிங்கம், மனோரஞ்சிதமலர் மற்றும் மனோகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, மகேஸ்வரி, பாலசெளந்தரி, அம்பிகைபாகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ஜனனி, ஆரணி, சரண்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment