யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், குரும்பசிட்டியை வாழ்விடமாகவும், தென் ஆப்பிரிக்கா Lesotho, Transkei, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகர் கந்தவனம் (கவிநாயகர் கந்தவனம்) அவர்கள் 11-03-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை விநாயகர் தம்பையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னர் இளையப்பா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,வாணி, வாரணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ருத்திரா, துஷிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான பசுபதி, மார்க்கண்டு, கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சரஸ்வதி, கணேஸ்வரி, நாககன்னி, காலஞ்சென்றவர்களான அருமைநாயகம், செல்வராஜா, சரஸ்வதி மற்றும் புஸ்பராணி, சாந்தமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற வளர்மதி, ஸ்ரீநாகேந்திரா, கஜேந்திரா, Dr. பிரேந்திரா, ராகுலன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,அம்பிகை அவர்களின் அன்பு மாமனாரும்,கிருஷ்ணா, வித்தியா, மீனாட்சி, துர்கா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment