யாழ். புங்குடுதீவு 10 ஆம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aarau ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகசபை காஞ்சனாபூரணன் அவர்கள் 13-05-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை மீனாம்பாள் தம்பதிகளின் அன்பு புதல்வனும்,சுஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற கனகசிவம்(மகேந்திரன்), கனகாபரனம்(ராசாத்தி, சுவிஸ்), நடனசிவம்(சிவா, கனடா), நாதரூபி(ரூபினி, Solothurn சுவிஸ்), சுவந்திரா(ஜேர்மனி), பகிதரன், கங்காதரன், கலியுகன்(Basel சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment