யாழ். வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜதுரை கணேசராஜா அவர்கள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை இராசரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகரத்தினம், பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற நவராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,மயூரன்(பிரான்ஸ்), ராஜினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஹரிகரன்(லண்டன்) அவர்களின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்ற கொலின் தேவராஜா, ஆரியமாலா தம்பதிகளின் சம்பந்தியும்,ரிஸ்விதா(லண்டன்), ஷஷிஜா(லண்டன்), ஜஷிகன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற பரமேஸ்வரி, இராஜேஸ்வரி, தவராசா, ஜெயராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற வரதராசா, இரவீந்தரன், தஜாநிதி, குமுதினி, நவநீதன், நவசக்தி, நவமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 25-04-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment