யாழ். மந்துவிலைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, கனடா Burlington ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி கந்தையா அவர்கள் 20-04-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பத்மாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,மீரா, முரளி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிரேமகாந்தன், சிவநங்கை ஆகியோரின் அன்பு மாமனாரும்,பிரவீனா, பிரவீன், ஆரோகி, ஏகன் ஆகியோரின் ஆருயிர்ப் பேரனும்,Quinn அவர்களின் அன்புப் பூட்டனும்,காலஞ்சென்ற இராசையா, நாகம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,கமலாவதி, பத்மநாதன், கயிலைநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment